Friday, June 8, 2012

பராமரிக்காதவர்களைப் பராமரிக்கும் அரசு

மணவிலக்கு பெற்ற பின்னர் பராமரிப்பு பணம் செலுத்தாதவர்களை சிறையிலிடுவதால் அவர்களைப் பராமரிக்க நாளொன்றுக்கு ரூபா 330 ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது என்று நீதியமைச்சு தெரிவிக்கிறது.

இது அரசுக்குப் பெருஞ்சுமையாகும். எனவே, பராமரிப்பு பணம் செலுத்தாதவர்களை இனிமேல் சீர்திருத்த முகாம்களுக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலைகள் மற்றும் மறுவாழ்வுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் சீர்திருத்த திணைக்களத்துக்கிடையில் கலந்துரையாடல் இடம் பெறவிருக்கின்றது.

No comments:

Post a Comment