Wednesday, June 13, 2012

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17.5 சதவீகிதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 830.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இந்த வருடத்தில் முதல் அரையாண்டில் 340 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment