Monday, June 4, 2012

ஃப்ளேம் வைரஸ் மத்திய வங்கியைத் தாக்லாம்.

பாதுகாப்ப்பு அமைச்சு, மத்திய வங்கி உட்பட 200க்கு மேற்பட்ட அரச நிறுவனங்களும், வங்கிகள் உட்பட தனியார் நிறுவனங்களும் கணினி வைரசின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று CERT எனப்படும் Computer Emergency Readiness Team Coordination Centre எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃப்ளேம் எனப்படும் இந்த வைரஸ்கள் கணினி தகவல் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியமன தகவல்களையெல்லாம் சட்டபூர்வமற்ற முறையில் அழித்துவிடும்.

எனவே, இதற்கான முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று CERT தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா கூறுகின்றார். இன்டர்நெற் ஊடாகப் பரவும் இந்த வைரஸை அழிக்க நிறுவனங்களால் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியாவிட்டால் CERT உதவலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com