Monday, June 11, 2012

ஒருவரை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்துடன் சரணடைந்த நபர்

கட்டுநாயக்க பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தனிப்பபட்ட தகராறு காணரமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்துடன் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் இன்று (11.06.2012) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment