Thursday, June 21, 2012

மீன்வெட்டும் கத்தியுடன் குற்றச் செயல் ஒன்றை புரிவதற்காக சென்று கொண்டிருந்த நபருக்கு பிணை

குற்றச் செயல் ஒன்றை புரிவதற்காக மீன்வெட்டும் கத்தியுடன் சென்று கொண்டிருந்த பொது கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை, நீர்கொழும்பு பிரதான நீதவான் 7500 ரூபா ரொக்கப் பிணையிலும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டார்.

கந்தானை சாந்த ஜுட் மாவத்தையை சேர்ந்த நபரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.

சந்தேக நபர் 2012 ஜுப்லி மாதம் 120 ஆம் திகதி இரவு கந்தானை ஜுட் மாவத்தையில் வைத்து கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment