Sunday, June 10, 2012

புலிகளின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர் என்பது பொய் என்கிறார் கே.பி

புலிகள் அமைப்பில் மீதமுள்ள உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்ற கருத்து புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் உள்ள குழுக்களுக்கு தமிழ் மக்கள் குறித்து உண்மையான அக்கறையிருந்திருந்தால், அவர்கள் நாட்டை விட்டுச் செல்லாதிருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விநாயகம் மற்றும் நெடியவன் போன்றவர்கள் போரின் பல கட்டங்களின் போது நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ள அப்பாவி தமிழர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளதாக இணையம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com