Wednesday, June 13, 2012

சுயநலம் அற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சி ஒன்றை உருவாக்கினால் இணைந்துக் கொள்ளத் தயார் - சரத்

பொது எதிர்கட்சி ஒன்றையே தாம் எதிர்பார்ப்பதாகவும் . சுயநலம் அற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சி ஒன்றை உருவாக்கினால் அதில் இணைந்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொது எதிர்கட்சியின் பதவிகள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி சிந்திக்காமல், நாட்டினை முன்னேற்றுவது குறித்து மாத்திரமே சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி, பதவிகளை, சின்னங்கள் போன்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது செயற்பட்டால் மாத்திரமே, அதலபாதாளத்தில் உள்ள நாட்டை கட்டி எழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com