Tuesday, June 12, 2012

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபகீர்த்தி பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையின் அபகீர்த்தி பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களுக்காக சிறுவர்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறுபட்ட போராட்டங்கள் இடம்பெறும் நாடுகளை உள்ளடக்கியதாக, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

மோதல்கள் இடம்பெற்ற காலத்தில், எல்.ரி.ரி.ஈ மற்றும் ரி.எம்.வி.பி.ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபகீர்த்தி பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் சிறுவர்களை இணைத்துக்கொள்வது,தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com