Tuesday, June 5, 2012

சீனாவுக்கு உதவும் இலங்கை சிஐடி

17 சீனரும் 1 இலங்கையரும் சேர்ந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் இணையத்தள கணிப்பொறித்தகவல் மோசடி பற்றிய விசரணைக்கு உதவுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

சீனாவில் இருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மூன்று கிழமைக்குள் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் சீனக்கம்பனிகளில் மோசடி செய்த இக்குழுவினரைக் கொழும்பு கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவரான பிரசன்ன விதாரணகே என்பவர் சீனப் பெண்ணைத் திருமணம் செய்தவராவார்.

No comments:

Post a Comment