Friday, June 8, 2012

அதிகார துஸ்பிரயோகம் செய்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை

தற்போது காலியில் பிரதிப் பொலிசு மா அதிபராகக் கடமையாற்றும் ஹெக்டர் தர்மசிரி, மாத்தளைப் பகுதியில் சிரேஷ்ட பொலிசு அத்தியட்சகராக இருந்த காலத்தில் இரத்தோட்டையில் குடியியல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு அலுவலரையும், ஒரு பொலிசு அலுவலரையும். மினுவாங்கொடையில் உள்ள தனது வீட்டைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்நது.

இக்குற்ச்சாட்டு உட்பட 15 குற்றச்சாட்டுளை இலஞ்ச ஆணைணக்குழு சுமத்தியதன் பேரில், அவரை ஜூலை 26 ம் திகதி நீதிமன்றில் சமூகமளிக்குமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்ட்ரேட் ரஷ்மி சிங்கப்புலி ஆணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment