Thursday, June 14, 2012

ஒழுக்கமற்ற பிக்குமார்களை விலக்க வேன்டும் - வண. அத்துரலிய தேரர்.

ஒழுக்கமற்ற பிக்குமார்களை விலக்கி விடுவதற்கு சாசனத்தை திருத்தி யமைக்க மகாநாயக்க தேரர்கள் இணங்கு வார்களாயின், நான் பாரளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க தயாராகவுள்ளேன் என்று ஜாதிக ஹெல உறுமய தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமாகிய வண. அத்தரலிய ரத்ன தேரர் ஊடகச் சந்திப்பென்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் மகாநாயக்க தேரர்கள் நிக்காய பேதங்களை விடுத்து ஒரே இலங்கை சங்கத்தை நிறுவ வேண்டும். உலகத்துக்கே புனிதமான தேரவாதப் பௌத்தத்தைக் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அப்படியிருக்கும் போது மியான்மார் மற்றும் தாய்லாந்து சாசனத்தை நிக்காயக்களாப் பிரிப்பது வேடிக்கையானது. இந்த நாட்டில் நாம் எல்லோரும் ஒரே தேரவாதப் பிரிவைச் சேர்ந்தவரகளாக இருப்பது போல ஒரே சங்கத்தை நிறுவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com