Monday, June 11, 2012

மனைவியின் காதலனை கொலை செய்துவிட்டு ஆயுதத்துடன் சரணடைந்த நபர்

தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் நபர் ஒருவரை குரிய ஆயத்தினால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துவிட்டு கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஆயுத்திடன் சரணடைந்துள்ளார்.

இச்ம்பவத்தில் காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் நீர்கொழும்ப மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாவதி என்ற 33 வயதுடைய பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

இக்கொலைச் சம்பவம் கட்டுநாயக்க, சுமித்ராராம விகாரை வீதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ரஞ்சித் உபுல் குமார என்ற நபரே சம்பவத்தில் பலியானவராவார்.இவர் கட்டுநாயக்க, சுமித்ராராம விகாரை வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தற்காலிகமாக தங்கியிருப்பவராவார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்துடன் சரணடைந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment