Tuesday, June 5, 2012

ரயில் முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

ஜா-எல குடுஹகபொலவில் முச்சக்கர வண்டியொன்று கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் 42 வயதான பிரதீப் பிரசன்ன, அவருடைய மனைவியான 40 வயதுடைய மேரியன் விஜிதா பெரேரா மற்றும் மகளான 12 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் வண்டியில் பயணித்த 6 வயது சிறுமி விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment