Monday, June 11, 2012

அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதி தாதியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை

கட்டுவன வைத்தியசாலையில் பணியாற்றும் அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியொருவர் அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றது. காதல் தொடர்பு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

51 வயதான அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியும் 47 வயதான தாதியும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இத்தாதி அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியை சந்திப்பதற்கு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள சகோதரர் அனுமதிக்காததுடன், அவருடனான உறவையும் முறித்துக்கொள்ளுமாறு தாதியைக் கோரியுள்ளார்.

இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியுடன் வந்த இச்சாரதி, இத்தாதியை குத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தலையிலும் மார்பிலும் முழங்கையிலும் கடும் காயங்களுக்குள்ளான இத்தாதி உயிரிழந்துவிட்டதாக கருதிய இச்சாரதி, வைத்தியசாலை கராஜில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com