Thursday, June 21, 2012

தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆசிரியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாடு உட்பட கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதில் கிடைக்காவிட்டால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் தொழிற் சங்க நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழில் சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சுக்கு முன் வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையில் 13 பிரேரணைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செய்லாளர் ஜோசப் ஸ்டான்லின் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com