Wednesday, June 13, 2012

பயங்கரவாதிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் களுக்கும் வீடு வேண்டும் –மே. மா. சபை உறுப்பினர்

இந்தியாவினால் யாழ்ப்பாணத்தில் கட்டிக் கொடுக்கும் 50,000 வீடுகளில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முலைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்டு அகதி களாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என கோரி மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீன் இந்திய தூதுவருக்கு மனுவென்றை அனுப்பியுள்ளார்.

இந்த மனு இந்தியப் பிரதமருக்கு முகவரியிடபட்டுள்ளதுடன், தமிழருடன் ஐக்கியமாக வாழ்ந்த 100,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் போர்க் காலத்தில் வாழ்விடத்தில் இருந்து பயங்கர வாதிகளால் துரத்தப்பட்டு சொல்ல முடியாத இன்னலை அனுபவித்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment