Thursday, June 14, 2012

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்வதை தடுக்க விஷேட நடவடிக்கை - உயர்ஸ்தானிகர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசரசமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் அதிகளவான இலங்கையர்கள் புகலிடம் கோரி செல்கின்றனர்.இந்நிலைமை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையிலேயே, கடற்படையினர், புலனாய்வுப் பிரிவினர், மற்றும் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் இலங்கையர்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com