Wednesday, June 13, 2012

ஆசிய ஒலிம்பிக் கவுண்சிலின் தலைவர் குவைத் இளவரசர் இன்று இலங்கை வருகிறார்

ஆசிய ஒலிம்பிக் கவுண்சிலின் தலைவர் குவைத் நாட்டின் இளவரசர் ஷேக் அஹமட் அல் சபாப் இரண்டு நாள் விஜயமாக இன்று பிற்பகல் இலங்கை வருகிறார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் இது முக்கியமாக நிகழ்வெனவும் எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச விளையாட்டு விழாக்களை நடத்துவதற்கு இந்த விஜயம் முக்கியமானதாக அமையும் எனவும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆசிய ஒலிம்பிக் கவுண்சிலின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments:

Post a Comment