Tuesday, June 12, 2012

பிக்குகளால் பௌத்த மதம் கெட்டுவிட்டது – பா.உ. விஜேதாஸ ராஜபக்ஷ,

போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற புத்த பிக்குமாரால் சாதிக்க முடிந்தது எதுவுமே இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்கு மதகுருமார் செல்வதைத் தடை செய்வதற்கான தனது பாராளுமன்றப் பிரேரணை தொடர்பான நாளாந்த ஊடக கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், புத்த பிக்குகள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டது. அவர்கள் பாராளுமன்றம் சென்ற பின்னர் பாராளுமன்றத்தைப் போல் பௌத்த மதமும் வீணாகிவிட்டது. அரசியலுக்கு வந்த பல பிக்குகள் சாதாரண மக்களைப் போல பாவனை செய்து சரியாகவோ தவறாகவோ கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி அரண்மனை போன்ற வீடுகளில் வாழ்ந்து கொண்டு எப்போதுமே பாகுபாடாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் மீது அனுதாபம் கொண்டு அவர்களை உண்மையான பௌத்த நெறியில் வழிபடுத்தவே நான் முயற்சிக்கின்றேன் என்றார்.

1 comment:

  1. உண்மைதான். பௌத்தத்தை போதிக்கிற பிக்குகள் அரசியல் களத்தில் இறங்கி அரசியல் பிக்குகளாக மாறி.. பெளத்த அடிப்படை அறத்திற்கு எதிராகவே, விரோதமாக செயல் படுகிறார்கள்..

    ReplyDelete