Saturday, June 16, 2012

தமிழீழத்தை அமைக்கவே மாகாணசபைத் தேர்தல் பொறி என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

சர்வதேச நாடுகள் தமிழீழத்தை அமைப்பதற்கு வட மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை அமுல்படுத்தினால் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்.இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் இதனால் 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப்படுவதன் மூலம் அதன் அதிகாரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தமிழ் ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com