Friday, June 15, 2012

மாடு திருடிய நபர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது

மாடொன்றை திருடி வீதியில் சென்று கொண்டிருந்த நபரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று இரவு நீர்கொழும்பு - ருக்காத்தன சந்தியில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஹீனஹிட்டியேன, மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்நத சனத் பிரியலால் சில்வா என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் ருக்காத்தன சந்தியில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை விசாரணை செய்த போது இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்ட போது, மாடொன்று களவு போன விடயம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்தது.

தெவமொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.சமன் பாலித்த என்;பவர் தனது மாடு காணாமல் போயுள்ளமை தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

பின்னர் முறைப்பாட்டாளர் மீட்கப்பட்ட மாடு தனது மாடென்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தான் மாடு திருடியதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மாட்டை படத்தில் காணலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com