Wednesday, June 13, 2012

சுற்றுலா மையமாகும் புலிகளின் கோட்டை!

எல்.ரிரிஈயினரின் கிழக்கின் கடைசிக் கோட்டையாக விளங்கிய பாரன்ஸ் கெப் எனப்படும் தொப்பிகலை பொதுமக்களுக் காகத் திறந்துவிடப்படவிருக்கின்றது. இதன் பெரும் பகுதி சுற்றுலா வலயமாக மாற்றப்பட விருப்பதாகவும் இங்கு நடைபெற்ற போரில் இறந்த முப்படையினரின் நினைவுத்தூபி அமைக்கப்படுமென்றும் இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறினார்.

முதலில் புலிகளின் வசம் இருந்த தொப்பிகலை பகுதி பின்னர் கருணா குழுவிடம் இருந்தது. 2007 ல் தொப்பிகலையைக் கைப்பற்றியவுடன் கிழக்கிலங்கை முழுதும் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com