Monday, June 11, 2012

நூதனசாலை திருடர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்களாம்

நூதனசாலையில் பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பாக பல்வேறு சாட்சிகள் கிடைத்துள்ளன. இந்த சாட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

தேசிய நூதனசாலையிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், சில பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பான தகவல்களும், சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஏனைய சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடபுடைய சந்தேக நபர்களை மிக குறுகிய காலத்தில் கைது செய்வதற்கும், திருடப்பட்ட நூதன பொருட்களை மீட்பதற்கும் முடியுமென, எதிர்பார்க்கின்றேன் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment