Tuesday, June 12, 2012

இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியம் என்கிறது ஜே.வி.பி

இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது இலங்கையின் அமைச்சரவை அன்றி, சர்வதேச நாணய நிதியமே என்று ஜே வி பியின் பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன்,ஜே வி பியில் தேவை இல்லாமல் பிளவை ஏற்படுத்தியது அவுஸ்திரேலியாவின் சூழ்ச்சி எனவும் அவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமையவே இலங்கையின் பொருளாதாரம் நகர்த்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment