Thursday, June 14, 2012

சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் –ஐ.தே.கட்சி அமைப்பாளர் தயா கமகே.

சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் எனவும், தங்களின் தலைவர் ரணில் தான் என்பதை ரங்கே பண்டார மறந்துவிடக்கூடாது, என ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்த ரங்கே பண்டா, தயா கமகே போன்றவர்களைத் திருபதிப்படுத்த சரத் பொன்சேகாவைக் கைவிட மாட்டேன். அவர் சாதாரண மனிதரல்லர் ஏல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தேசாபிமானி என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்த கட்சியில் சிலர் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி சிரேஸ்ட்ட எதிர்க்கட்சி பாராளமன்ற தவிசாளர்,ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்கள் சரத் பொன்சேகா தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியில் விரித்திருக்கும் வலைகள் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com