Sunday, June 10, 2012

வெல்லாமுள்ளியில் விரைவில் மீள குடியமர்வு.

புலிகளுடனான இறுதி யுத்தம் நிறைவு பெற்ற முல்லைத்தீவு வெல்லாமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணி ஆரம்பமாகிவிட்டது என்றும் இந்தப் பணியில் இராணுவ பொறியியல் வீர்ர்களுடன் வெளிநாட்டு கண்ணிவெடியகற்றும் குழுவும் அமர்த்தப்பட்டுள்ளன என்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க் தெரிவிக்கின்றார்.

இதனால் இன்னும் இரண்டு மாதத்தில் மெனிக் பாமில் எஞ்சியிருக்கும் 1300 குடும்பங்களையும் மீளக் குடியமர்த்த முடியு மென்றும் மேலும் குறிப்பிட்ட மே.ஜெ. புலிகளால் இப்பகுதியல் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் நாளாந்தம் கிடைத்து வருகின்றன என்றும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com