Thursday, June 14, 2012

கொச்சிக்கடையில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 7 பேர் காயம்

கொழும்பு , கொச்சிக்கடை – ஜம்பட்டா வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கியிருந்த போது கார் ஒன்று கூடாரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது 8 மாத குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளார் அத்துடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறக்குவானை பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com