Friday, June 15, 2012

போலி தங்க விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

நாட்டின் பல பகுதிகளிலும்; போலி தங்க விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்குமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் புதையல் அகழ்வின் மூலம் தங்கம் கிடைத்ததாக கூறி போலி தங்கத்தை விற்பனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி நான்கு பேர் மெதுருகிரிய பகுதியிலும், இருவர் மிஹிந்தலையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com