Thursday, June 14, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட 53 பேர் ஆழ்கடலில் கைது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகக் கருதப்படும் 53 பேரை கிழக்கு கரையில் இருந்து 60 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 47 இலங்கையரும், 2 இந்தியரும், 4 அமைப்பாளர்களும் அடங்குகின்றனர் என தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை அம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com