Saturday, June 16, 2012

தியவதன நிலமேவுக்கு 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தலதா மாளிகையின் தியவதன நிலமேயான நிலங்க தேலவுக்கு 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு மூவருக்கு படி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீசாந்த விஜய, வண சுமங்கள தேரர் , தேசிய சொத்துகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தை சேர்ந்த புத்திக டயஸ் உஷான் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தலதா மாளிகையில் இருந்த புதிய தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றை காணவில்லை என தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் இது தொடர்பான செய்தி பல ஊடகங்களில் வந்தது எனவும், இந்த தகவலின் மூலம் தனது கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து தியவதனே நிலமே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கிலேயே அவருக்கு 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிபதி தம்மிக கனேபொல உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com