Wednesday, June 13, 2012

சிறைக்கைதி எயிட் நோயினால் மரணம். உடனிருந்த கைதிகளை சோதனை செய்ய உத்தரவு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் எயிஸ்ட் நோயினால் மரணமடைந்ததையடுத்து, அவருடன் சிறைவைக்கப்பட்டிருந்த ஏனைய சந்கே நபர்களின் இரத்தத்தை பரிசோதித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு சிறைச்சாலையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி எயிட்ஸ் நோயினால் மரணமடைந்த வேளையில், இவருடன் மேலும் 220 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலைகள் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த 220 சந்தேக நபர்களினதும் இரத்தத்தை பரிசோதித்து அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment