Thursday, June 14, 2012

கொழும்பு நட்சத்திர ஹோட்டலின் 18 வது மாடியிலிருந்து வீழ்ந்து மாலைதீவு பிரஜை பலி

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மாலைதீவு பிரஜை ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவர் இன்று காலை குறித்த ஹோட்டலின் 18 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த மாலைதீவு பிரஜை தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் மேலும், சில மாலைதீவு பிரஜைகள் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?, தவறி வீழ்ந்தாரா?,அல்லது கொலை முயற்சியா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com