Monday, June 11, 2012

13 வயது சிறுமியுடன் தப்பாக நடந்த சித்தப்பா கைது

தனது மனைவியின் மகளான 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயாருடைய இரண்டாவது கணவனே (சித்தப்பா) கைது செய்யப்பட்டவராவார்.

கோங்கொடமுல்ல - அக்கரஅத்த பிரதேசத்தை சேர்ந்த தென்னக்கோன் பத்திரனலாகே திலகரட்ன என்பவரே கைது செய்யப்பட்டவராவார். தனத கணவர் இறந்ததை அடுத்து சிறுமியின் தாயார் சந்தேக நபரை திருமணம் செய்துள்ளார்.சிறுமிக்கு அக்கா (17 வயது) ஒருவரும் தங்கை ஒருவரும் உள்ளனர்.எல்லோரும் ரே வீட்டயே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மதுப் பழக்கமுடைய சந்தேக நபர் சிறுமியின் தாயாருக்கு மது அருந்தப் பழக்கியுள்ளார். சிறுமியின் தாயார் போதை ஏறி துங்கியதன் பின்னர் நீண்டகாலமாக காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்த போது சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மெலதிக நீதவான் ரஜீந்ர யு ஜயசூரிய உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com