Thursday, June 14, 2012

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 12 கைது

பொகவந்தலாவ ராணிக்காடு பிரதேச த்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேரை, ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ ராணிக்காடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும், கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com