Tuesday, June 12, 2012

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 11 பேர் புத்தளத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 11 பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை புத்தளம் வைத்தியசாலைக்கு பின்புறமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 9 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களை கைது செய்ய புத்தளம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment