Friday, May 18, 2012

ஊடகவியலாளர் என கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது.

தெனியாய பொலிஸ் பிரிவில் ஊடகவியலாளர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊழல்கள் தொடர்பான தகவல்களை ஊடகங்களில் வெளியிட போவதாக தெரிவித்தே அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மொறவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை இந்தமாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment