Monday, May 21, 2012

இலங்கைக்கு ஒப்பந்தங்கள் நிபந்தனைகள் இன்றி உதவிகள் வழங்கப்படும். கட்டார் மன்னர்.

இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைய வேண்டுமென்பதே, கட்டார் அரசாங்கத்தின் நோக்கம் என்பதுடன், அதற்கு எவ்வித ஒப்பந்தங்கள் அல்லது நிபந்தனைகளின்றி, அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக, கட்டார் மன்னரும், பிரதமரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, கட்டாh மன்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜனாதிபதியிடம் கருத்து தெரிவித்த கட்டார் மன்னரான ஷேக் ஹமாட் பின் கலீபா அல்தானி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தினால், தமது நாடு பெரும் பாக்கியம் பெற்றதாக, தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு மதிப்பும் கௌரவமும் அளிக்கும் பொருட்டு, தனது வெளிநாட்டு பயணத்தைக்கூட ரத்து செய்ததாகவும், கட்டார் மன்னர், இச்சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக கட்டார் அரசாங்கம் இதுவரை வழங்கி வந்த உதவி தொடர்பாக, தாம் திருப்தியடைய முடியாதென தெரிவித்த மன்னர் அல்தானி, எதிர்காலத்தில் எந்தவொரு உதவியையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காக வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, அதனை தோற்கடித்து, மிகவும் துரிதமாக பிராந்தியத்தின் உன்னத நிலையை அடைந்துள்ளது. இதற்கு காரணம், திறமையான தலைமைத்துவமே எனவும், கட்டார் மன்னர், இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கட்டார் பிரதமர் ஹமாட் பின் ஜாஸிம் பின் ஜாபர் அல்தானி கருத்து தெரிவிக்கையில், இலங்கையி;ன் அபிவிருத்தி நடவடிக்கைகளில், தமது நாடு மிகவும் ஆர்வம் செலுத்தி வருவதாக, தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெனீவா மனித உரிமை பேரவையில், கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக, ஜனாதிபதி இச்சந்திப்பின்போது, தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார். அமைச்சர்கள், பலரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com