Wednesday, May 16, 2012

காவியுடையணிந்து பிச்சையெடுத்தவர் பொலிசில்..

புத்த பிக்குகளின் காவியுடைய அணிந்து கொழும்பிலும் அண்மித்த நகரங்களிலும் பலர் பிச்சையெடுத்துத் திரிகின்றனர். அவ்வாறான ஒருவர் இன்று மகரகமையில் பிடிபட்டு மிரிகானை பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று மாமித்தாவ பிரஞ்ஞாரத்ன தேரர் கூறினார். தான் உட்பட பலர் அவரை விசாரித்தபோது புத்த பிக்குக்கான எவ்வித ஆதாரமும் அவரிடம் இல்லையென்றும், அவர் நேற்று சாதாரண உடையில் நகரத்தில் உலாவியதை மக்கள் கண்டதாகக் கூறியதாகவும் தேரர் சொன்னார். இது போன்று இன்னொருவர் சிலநாட்களுக்கு முன்பு பொரலஸ்கமுவையில் பிடிபட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புத்தரின் காலத்தைப் போன்று பிச்சைப்பாத்திம் ஏந்தி இரந்துண்டு வாழும் உண்மையான பௌத்தம் இலங்கையில் துளிர் விடுகின்றதோ அல்லது புத்த தருமப்படி பிச்சை எடுத்து வாழ்வது 21-ம் நூற்றாண்டு பிக்குகளான தமக்கு இழுக்கென்று கருதுகிறார்களோ அல்லது ஏமாற்றிப் பிழைக்க இலகுவழி இதுதான் என்று இளைஞர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com