Wednesday, May 16, 2012

தீவுப் பகுதிப் போக்குவரத்தை மீள வடிவமைக்கக் கோரிக்கை

நயினாதீவு, நெடுந்தீவு கடல் பயண அளவை அதிகரிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. அமைதியற்ற காலத்தில் அமுல்படுத் தப்பட்ட பயணங்களின் அளவுகள் தொடர்ந்தும் பேணப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான பயணம் மாலை 5மணிக்கும், நயினாதீவுக்கான பயணம் மாலை 6 மணிக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பயணிகள் தமது தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். நிரந்தர சமாதானம் நிலவும் நாட்டில் தமது தேவைக்கு ஏற்ப பயணங்களை மேற்கொள்ளும் வகையில் , பயண அளவுகளை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

No comments:

Post a Comment