Wednesday, May 30, 2012

சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சர் வன்னிக்கும் விஜயம்.

இலங்கையில் தனது ஐந்து நாள் விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சர் கே. சண்முகம். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கவும் இச்சந்தர்ப்பத்தினை விஜயத்தினை அவர் பயன்படுத்திக் கொள்வார் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியையும் வெளிநாட்டமைச்சரையும் அவர் சந்திப்பார். தன்னோடு சிங்கப்பூரிலிலிருந்து வரும் வர்த்தகக் குழுவினரும் இலங்கை வர்த்தகக் குழுவினரும் கலந்து கொள்ளும் 30ம் திகதி கலந்துரையாடலில் அவர் கலந்து கொள்வார். வடக்கு கிழக்குப் பகுதிக்குச்செல்லும் அவர் அங்குள்ளவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அலுவலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

No comments:

Post a Comment