Tuesday, May 15, 2012

பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் கலை விழா

பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் கலை விழாவும் இளங்கதீர் இதழ் வெளீயிடும் கௌரவிப்பு நிகழ்வும் பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீட ஈ ஓ. ஈ. பெரேரா அரங்கில் தமிழ் சங்கத்தின் தலைவர் அ. செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் வஜிர வீரசிங்க கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் எழுத்தாளர் செ. கணேசலிங்கம் , கல்வியாளர்களான பேராசிரியர் எஸ். மகாலிங்கம். பேராசிரியர் த. யோகரத்னம், பேராசிரியர் வா. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான், பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி வ. மகேஸ்வரன் தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் ரமீஸ் ஆப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

இக்பால் அலி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com