Tuesday, May 15, 2012

பொன்சேகா விரைவில் விடுதலை - ஜனாதிபதி தெரிவிப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹிந்து ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில், ஜனாதிபதி தமது ஊடகத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை விடுவிப்பதில் ஏன் தாமதம் நிலவுகின்றது என ஹிந்து ஊடகம் வினவிய போது, அவரை விடுவிப்பதற்கு சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்த நபர் நாட்டிற்கு வெளியே இருப்பதே இதற்குக் காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com