Tuesday, May 22, 2012

நீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்த குற்றத்திற்காக ஹிருனிகா பிரேமசந்திர மீது வழக்கு

முல்லேரியா சம்பவம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்தார் என்ற குற்றத்திற்காக பாரதலக்ஷமன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றத்த்தின் தீர்ப்புக்களை ஊடகங்களுக்கு விமர்சித்திருந்தார் என நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளதுடன், நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என ஹிருனிகா தெரிவித்துள்ளதோடு, போலி குற்றச்சாட்டுக்கள் மூலமாக சிறையில் வைக்க துமிந்த சில்வாவிவின் தரப்பு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment