Thursday, May 17, 2012

கஞ்சா போதைப்பொருளை கடத்திய இருவர் கைது

எம்பிலிபிட்டியவிலிருந்து அரங்கல பகுதிக்கு லொறியொன்றில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளை, அரங்கல பாலத்திற்கு அருகாமையில் வைத்து தலங்கம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கஞ்சா போதைப்பொருளை எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் கைதுசெய்து;ளதாவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கடுவெல மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment