Wednesday, May 16, 2012

வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிப்பனை அடுத்து பதிவு நடவடிக்கை குறைவு

வாகன இறக்குமதிகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டதையடுத்து வாகன ங்களை பதிவு செய்யும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மார்ச் மாதத்தில் 23 ஆயிரத்து 140 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் 21 ஆயிரத்து 369 வரை அது குறைவடைந் துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 270 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் 7 ஆயிரத்து 667 ஆக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மார்ச் மாதத்தில் ஆயிரத்து 437 லொறிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் 924 ஆக குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment