Sunday, May 27, 2012

போரை வெற்றி கொண்டது நான் என்று யாரும் கூறமுடியாது - கோட்டாபய

போரை வெற்றி கொண்டது நான் என்று யாரும் கூறமுடியாது. நான் என்று கூறுவதானால், போரில் இறந்தவர்களை நான் காப்பாற்றியருக்க வேண்டும். அவ்வாறு பொன்சேகா நினைப்பாரானால், போர்க்களத்தில் மற்றவர்களோடு மரணமடைந்திருக்க வேண்டும். உண்மையில் நான் அப்படித்தான். இதனால்தான் நான் ஊடகத்தினரை ஏசினேன். தவறு செய்பவர்களை எனக்குப் பிடிக்காது இவ்வாறு தெரிவித்துள்ளதார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச.
.
தனது வாரயிறுதி ஊடகச் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் மேலும் கூறியதாவது, தனக்கு படைத்தளபதி பதவி கொடுத்து, போரின் முக்கியமான இடத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு எதிராக சரத்பொன்சேகா எழும்பியது எவ்வாறு. போருக்கு ஆதரவு தராத கூட்டத்தினருடன் அமர்வது எவ்வாறு. இந்த நிலைக்கு அவர் தாழ்ந்தது சுயநலத்துக்காகத்தான், வேறொன்றுக்கும் இல்லை.

No comments:

Post a Comment