Thursday, May 17, 2012

சரத் பொன்சேகாவை நிபந்தனையின்றி விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார் – அனோமா

தனது கணவரான சரத் பொன்சேகாவை நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்தார் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று (16) இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட சில விடயங்களுக்குத் தாம் உடன்படவில்லை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

. இதேவேளை, ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில விடயங்களுக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி எந்தவித நிபந்தனைகளும் விதிக்கவில்லை எனவும், எதிர்வரும் வாரமளவில் அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com