Tuesday, May 15, 2012

வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

அரசாங்கத்தினால் வடகிழக்கில் மேற் கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி யுள்ளதாகவும், இதுவரை வடகிழக்கு மாகாணங்களில் 2 இலட்சத்து 84 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப் பட்டுள்ளதுடன் மேலும் 6 ஆயிரத்து 22 பேர் மீள்குடியேற்றப்பட வுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இவ் 6 ஆயிரத்து 22 பேரும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வெள்ளமுல்லி வாய்க்கால் ஆகிய பகுதிகளிலே மீள்குடியமர்த்தப்படவுள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் அமைதியான சூழலில் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com