Friday, May 18, 2012

ரகசிய ஆயுத சப்ளை புகார்: அடுத்த வாரம் ஐ.நா. சபையில் ஆய்வு அறிக்கை தாக்கல்

வடகொரியா, ரகசியமாக ராணுவ ஆயுதங்கள், கருவிகள் மற்றும் ஆடம்பர பொருட்களை சிரியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. இது ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிரானது என்றும், அந்த நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. வடகொரியா ரகசியமாக ராணுவ ஆயுதங்களை சப்ளை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நிபுணர்களின் இந்த ஆய்வு அறிக்கை அடுத்த வாரம் ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். அதன்பிறகு வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment