Wednesday, May 16, 2012

பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

பெல்மடுல்ல ரில்ஹேன பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் கனரக வாகனமும் மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

பலாங்கொடையிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி இரத்தினபுரியிலிருந்து பெல்மடுல்ல நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வண்டியுடன் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்றட்டுள்ளது.

கனரக வண்டியின் சாரதியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com